Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

வடக்கின் பிரம்மாண்டமான திருவிழாவாக ஆரம்பமாகியது 2017 தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா!!!

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்கள் பிரிவு : விளையாட்டு

...

விபரம் :

வடக்கு மாகாணத்தின் தமிழ் பரா விளையாட்டுப்போட்டியின் முதலாவது நாள் போட்டிகள் இன்று காலை கிளிநொச்சி மத்தியகல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. இதில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு உற்சாகமாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டிகளின் முக்கிய அம்சமாக சக்கர நாட்காலி கூடை பந்தாட்ட போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் 6 ஆண்களின் அணிகளும், 2 பெண்களின் அணியும் மோதிக்கொண்டன. ஏனைய சுவட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றதோடு மேலதிக போட்டிகள் நாளை (30/07/2017) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

இன்றைய தெரிவு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் நாளை இடம்பெறவுள்ள இறுதிப்போட்டிகளில் தவறாது கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

திகதி

2017/07/29

நேரம்

09:00 AM

இடம்

கிளிநொச்சி

பகிர்



தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay